புகார் மனு அளிக்க முடியவில்லை

Update: 2023-02-22 09:03 GMT

கோவை காருண்யா நகர் சிறுவாணி மெயின்ரோட்டில் பஸ் நிறுத்தம் உள்ளது. இதனருகில் உள்ள மரத்தில் போலீஸ் நிலைய புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த புகார் பெட்டி, மரத்தில் பொருத்தப்படாமல் சொருகி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பயன்படுத்த முடியாத வகையில் வைக்கப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக அதில் போட முடியாமல் சிரமம் அடைகின்றனர். எனவே அந்த புகார் பெட்டியை மரத்தில் சரியாக பொருத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்