சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டி ஊராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட வகுப்பறை மற்றும் சமையல் கூடம் மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த கட்டிடத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிய வகுப்பறைகள் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
-குருபாலன், மஜ்ராகொல்லப்பட்டி, சேலம்.