கடலூர் மாவட்டத்தில் கடலூர், பரங்கிப்பேட்டை, கிள்ளை உள்பட பல்வேறு ரெயில் நிலையங்களில் உள்ள இலவச கழிப்பறை பூட்டியே கிடக்கிறது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பெண்கள், வயதானவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பூட்டிக்கிடக்கும் கழிப்பறையை பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?