பெண்ணாடம் பகுதிக்கு உட்பட்ட வடகரை, நந்திமங்கலம், கோனூர் ஆகிய கிராமங்களுக்கு கோனூரில் கிராம நிா்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. ஆனால் கோனூர் கிராம நிர்வாக அலுவலர் பெண்ணாடத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனால் கோனூர் கிராம மக்கள் முக்கிய ஆவணங்கள் பெற வெகுதூரம் செல்ல வேண்டும் நிலை உள்ளதால் பெரும் அதிப்படுகின்றனர். எனவே கோனூரில் கிராம நிா்வாக அலுவலர் பணிபுரிய வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாகும்.