தரைப்பாலம் அமைக்கப்படுமா?

Update: 2023-02-19 14:25 GMT

அந்தியூர் பெரியார் நகரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மழைக்காலத்தில் ஏரி நிரம்பி அந்த பகுதியில் ஓடையில் அதிக அளவில் தண்ணீர் சென்றது. இதனால் அங்குள்ள தரைப்பாலம் இடிக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் 6 மாதங்கள் ஆகியும் தரைப்பாலம் அமைக்கப்படவில்லை. இதனால் ஓடையில் சாக்கடை கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது. மேலும் சாக்கடையில் குப்பைகளும் கொட்டப்படுகிறது. எனவே மீண்டும் அந்த ஓடையில் தரைப்பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்