பூட்டப்பட்டுள்ள அரசு ஆரம்பப்பள்ளி

Update: 2023-02-19 11:44 GMT

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி கவுண்டன்புதூரில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு அங்கு1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் பள்ளிக்கு மாணவர்களின் வருகைப்பதிவு குறைந்ததன் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்பப்பள்ளியை பூட்டி விட்டனர். இதனால் ஏழை- எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் சேமங்கி மற்றும் முத்தனூர் பகுதிக்கு சென்று படித்து வருகின்றனர். உள்ளூரில் பள்ளிக்கூடம் இருந்தும் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மூடப்பட்டுள்ள அரசு ஆரம்பப்பள்ளியை திறந்து வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளியில் மாணவ- மாணவிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்