கழிவறை வேண்டும்

Update: 2023-02-15 13:07 GMT

பெரம்பலூர் மாவட்டம், அந்தூர் கிராமத்தில் வேப்பூர் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், அருகிலுள்ள தனியார் பள்ளி ஆகியவற்றின் முன்பு சாலையின் இருபுறமும் பொதுமக்கள் இயற்கை உபாதை கழித்து அசிங்கப்படுத்துகின்றனர். அந்த வழியாக எந்த வாகனமும் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியவில்லை. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. அந்தூர் கிராமத்தில் மொத்தம் 4 இடங்களில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு கழிவறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் ஊராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்