சுகாதார சீர்கேடு

Update: 2023-02-15 13:01 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் ஊராட்சி, அண்ணாநகர் பஸ் நிறுத்தம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக பஸ் நிறுத்தம் அருகே ஆழ்குழாய் கிணற்றுடன் கூடிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் குழாயில் இருந்து வெளியேறும் நீர் அருகே குளம்போல் தேங்கி கழிவுநீராக மாறி வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுபோல் காட்சி அளிக்கிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்