கிடப்பில் போடப்பட்ட மழைநீர் வடிகால் பணி

Update: 2023-02-15 12:35 GMT

தூத்துக்குடி மாநகராட்சி 56-வது வார்டு குமாரசாமிநகர் 3-வது தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் அங்குள்ள வீடுகளுக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு சிரமமாக உள்ளது. மேலும் அங்கு தோண்டப்பட்ட பள்ளத்துக்குள் குழந்தைகள், முதியவர்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்