தெருநாய்கள் தொல்லை

Update: 2023-02-15 12:23 GMT

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதால், ஏராளமானோர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். இதேபோல் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்களை தெருநாய்கள் துரத்தி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இரவு நேரங்களில் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்