புதர் செடிகளை அகற்ற வேண்டும்

Update: 2023-02-15 10:07 GMT

கோவை கீரணத்தம் புதுப்பாளையம் சாலையோரத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அதனருகில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. அவை வெயிலில் காய்ந்து கிடப்பதால், அடிக்கடி தீ பரவி வருகிறது. அந்த தீ குப்பைகளுக்கும் பரவுகிறது. இதனால் புகைமூட்டம் ஏற்பட்டு, அந்த வழியாக செல்பவர்கள் மூச்சுத்திணறலால் அவதிப்படுகிறார்கள். மேலும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு தீ பரவ வாய்ப்பு உள்ளது. எனவே புதர் செடிகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்