கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள மரவாப்பாளையம் மெயின் ரோட்டில் அப்பகுதி வாசகர்களின் நலன் கருதி நூலகம் கட்டப்பட்டது. இந்த நூலகத்திற்குள் பல்வேறு வகையான நூல்கள் உள்ளன. தினசரி நாளிதழ்களும் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நூலகத்திற்கு நூலகர் இல்லாததால் நூலகத்தை பல ஆண்டுகளாக பூட்டி வைத்துள்ளனர். இதனால் நன்மை பயக்கும் நூல்கள் பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. வாசகர்களும் நாளிதழ்கள் மற்றும் நூல்களை படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.