விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க ஏராளமானோர் வருகின்றனர். அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் வருகின்றனர். இவர்கள் பஸ் நிறுத்தத்தில் இருந்து அலுவலகம் வரை மிகுந்த சிரமத்துடன் நடந்தோ அல்லது பிறரின் உதவியுடனோ செல்கின்றனர். எனவே மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பஸ் நிறுத்தம் முதல் அலுவலகம் வரை சக்கர நாற்காலி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.