புதர்களை அகற்ற வேண்டும்

Update: 2022-07-19 17:06 GMT

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை பின்புறம் மதனகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது. இப்பகுதி முட்களும், புதர்களும் விளைந்து காடு போல் வளர்ந்துள்ளன. மேலும் வடக்கு மாதவி சாலையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கறிக்கோழி கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகள், காய்கறி கழிவுகள் இப்பகுதியில் தொடர்ந்து கொட்டப்படுகிறது. பொதுமக்கள் இந்த நிலத்தில் தங்களது வீட்டுகுப்பைகளை தினமும் கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் சூழல் சீர்கேடு அடைகிறது. அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் புதர்கள் மண்டிப்போய் சுகாதார சீர்கேட்டை விளைவித்து வருகிறது. டெங்கு கொசுக்களின் பிறப்பிடமாக உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இப்புதர்களை கோவில் நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் அகற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்