தமிழகத்தின் மாநில மரமாக விளங்கும் பனை மரத்தை பாதுகாக்க தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் கடந்தாண்டு வெளியிட்டுள்ளது. மழையை ஈர்க்கும் மையங்களாகவும், நீர் நிலைகளின் காவலனாகவும், மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை பராமரிப்பதிலும் பனை மரங்கள் முக்கிய பங்காற்றுவதே இதற்கு முக்கிய காரணங்களாகும். அதன்படி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் மன்னார் கோவில் தெற்கு புறத்தில் சிறிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் அரசு அதிகாரிகள் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றிலும் ஏரியின் கரையை வலுப்படுத்தி,100 நாள் வேலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை கொண்டு பனை விதைகளை சேகரித்து, அதனை அவர்களை கொண்டு ஏரி கரைகளில் நடவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.