தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-02-08 12:31 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, மாஞ்சன்விடுதி ஊராட்சி, மாஞ்சன்விடுதி அம்பேத்கர்நகர் அங்கன்வாடியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடியின் முன் பகுதியில் பள்ளமாக உள்ளதால் மழைபெய்யும்போது இப்பகுதியில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்