கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள பொதுமக்களை கடிக்க வருவதினால் அவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தெருநாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.