அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் மேல் தளத்தில் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் அறையில் நோயாளிகள் தங்கி மருத்துவம் பெற்று வருகின்றனர். இந்த வார்டுகளில் மின் விசிறி கடந்த சில நாட்களாக இயங்கவில்லை. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.