சிதம்பரம் அண்ணாமலைநகர் செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த ரெயில்வே மேம்பாலத்தில் மின்விளக்கு எரியாததால், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் வேகத்தடையும் இல்லாததால் வாகன ஓட்டிகள் அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க மின்விளக்கு வசதி, வேகத்தடை அமைப்பதுஅவசியம்.