திறந்து கிடக்கும் சாக்கடை கால்வாய்

Update: 2023-02-01 14:41 GMT
பெங்களூரு வித்யாரண்யபுரா ஸ்ரீநிதி லே-அவுட் பகுதியில் சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாயில் சீரமைப்பு பணிக்காக அதன்மேல் வைக்கப்பட்டிருந்த கற்களை அகற்றி தோண்டப்பட்டிருந்தது. நீண்ட நாள் ஆகியும் தோண்டப்பட்ட சாக்கடை கால்வாய் மூடப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் குழந்தைகள் தவறி விழும் அபாயமும் உள்ளது. இதனால் திறந்து கிடக்கும் சாக்கடை கால்வாயை மூட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்