விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தின் எதிரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை தினமும் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் ராணுவம், காவல்துறை பணிகளுக்கு தயார்படுத்திக்கொள்ளும் வாலிபர்கள் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். சில சமயங்களில் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்று வருகிறது. எனவே நுழைவுவாயில் பகுதியின் இருபுறமும் புதர்மண்டி மேடு, பள்ளமாக காணப்படுகிறது. எனவே புற்களை அகற்றி நடைபாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.