புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-01-29 13:20 GMT

பெரம்பலூர் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2017-18-ம் நிதியாண்டில் செங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ 8.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்த மையத்தில் குழந்தைகள் ஏறி இறங்கும் படிகளில் தற்போது கைப்பிடி, தடுப்பு சுவர் இல்லாததால் குழந்தைகள் கவனக் குறைவால் செல்லும்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குழந்தைகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த செங்குணம் ஊராட்சி நிர்வாகம் அங்கன்வாடி மையத்தின் படியில் இரும்பாலான கைப்பிடி தடுப்பு அமைத்தது. இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்