நாய்கள் தொல்லை

Update: 2023-01-29 11:24 GMT

மயிலாடுதுறை மாவட்டம் எடத்தெரு, அண்ணாவீதி பகுதியில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகிறது. இவை அந்த பகுதியில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை வேட்டையாடுகின்றன. சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கிறது. அதுமட்டுமின்றி வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்