பயிர்களை சேதமாக்கும் பன்றிகள்

Update: 2023-01-29 11:22 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில்அல்லிவிளாகம் கிராமம்,நடராஜபிள்ளை சாவடி,ஆலங்காடு பகுதியில் வாழை நிலக்கடலை,மரவள்ளிகிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த விளைநிலங்களுக்குள் அடிக்கடி பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. வாழை கன்றுகளை சாய்த்தும், பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்