கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் கால்கடுக்க வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்வதால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மங்களூர் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாகும்.