குளத்தின் படிக்கட்டுகள் சீரமைக்கப்படுமா?

Update: 2023-01-22 11:18 GMT
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் தெப்பக்குளமான திருக்குளம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குளித்தும், துணிகளை துவைத்து பயன்படுத்தி வருகின்றனர். கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களும் அதிக அளவில் வந்து நீராடிச் செல்கின்றன. தற்போது குளத்தின் படித்துறைகளில் பாசிபடந்து காணப்படுவதால் குளிக்க வரும் பொதுமக்கள் தவறி விழுந்து வருகின்றனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் உள்ள பாசிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்