சுகாதார வளாகம் தேவை

Update: 2023-01-22 11:10 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால்

ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த அனைத்து சுகாதார வளாகங்களும் இடிக்கப்பட்டுள்ளன. இதனால்

கழிப்பிட வசதி இல்லாமல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும், குறிப்பாக பெண்கள் மிகுந்த

சிரமப்படுகின்றனர். தனியார் கழிப்பிடங்கள் பலமடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே பக்தர்கள்

வசதிக்காக உடனடியாக தற்காலிக கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்