பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் சுற்று வட்டாரத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் துணிகள் தயாரிப்பதற்காக மூலப்பொருட்கள் தயார் செய்து வருகின்றனர். எனவே பாடாலூர் அருகே ஜவுளி பூங்கா அமைத்தால் இவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.