திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையம் மற்றும் வடக்கு ரத வீதி பஜாரில் இரவில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் வாகன விபத்துகளும் நிகழ்கின்றன. மேலும் இவைகள் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை முட்டி தள்ளுவதால் பலரும் காயமடைந்தள்ளனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறான மாடுகளை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.