விருதுநகர் கொல்லர் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சமீபகாலமாக கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள் கொசுக்கடியால் சரிவர தூக்கமின்றி அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.