சாலையோர மரங்கள் பாதுகாக்கப்படுமா?

Update: 2023-01-11 11:50 GMT

பெரம்பலூர்- அரியலூர் சாலையின் ஓரத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு பலன்களை வழங்கி வந்த புளிய மரங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சாலை விரிவாக்கத்தின் போது வெட்டப்பட்டது. தற்போது மிககுறைவான நிழல் தரும் மரங்களே இச்சாலையில் உள்ளது. அந்த மரங்களிலும், சில மரங்கள் குறிப்பாக நான்கு ரோடு முதல் எறையூர் பாதை வரை இடைப்பட்ட பகுதியில் திடீர் திடீர் என்று பட்டுப்போகிறது. ஆகையினால் பட்டுப்போன மரங்களை முறையாக ஆய்வு செய்து மீதம் உள்ள மரங்களையாவது முறையாக பாதுகாத்து பலன் அளிக்கும் வகையில் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்