புதருக்குள் குழாய்

Update: 2023-01-08 18:23 GMT

அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் விஷ ஜந்துகள் ஊர்ந்து வர வாய்ப்பு உள்ளது. மேலும் குழாயின் உயரம் மிகவும் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் குடங்களை வைத்து தண்ணீர் பிடிக்க சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் குழாயை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்தவும், குழாயின் உயரத்தை அதிகப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

மேலும் செய்திகள்