மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை

Update: 2023-01-08 13:27 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூரில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துவிட்டது. இந்த நிலையில் அந்த சுற்றுச்சுவர் மீண்டும் கட்டப்படாமல் உள்ளதால் சமூக விரோதிகள் விடுதிக்குள் புகும் நிலை உள்ளது. இதனால் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்