திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் வரையும், மூடிய பின்பும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. எப்போதும் இப்பகுதியில் மதுபாட்டில்கள் கிடைப்பதினால் இப்பகுதிக்கு மதுப்பிரியர்கள் எந்த நேரமும் வந்து மது அருந்திவிட்டு சாலையோரம் அரைகுறை ஆடைகளுடன் படுத்து கிடக்கின்றனர். இதனால் இப்பகுதியில் பெண்கள் நடமாட முடியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.