குரங்குகள் தொல்லை

Update: 2023-01-08 11:48 GMT
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் 4-வது வார்டு பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தின்பண்டங்கள், மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச்சென்றுவிடுகின்றன. மேலும் குழந்தைகளை குரங்குகள் கடிக்க வருவதால் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்