கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 18 பட்டி கிராம மக்களுக்கு சொந்தமான கோவில். கோவிலின் திருவிழா வருடா வருடம் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். கடந்த சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல்- வேலாயுதம்பாளையம் தார்சாலை அருகில் கோவில் கட்டப்பட்டிருந்தது. தார் சாலை ஓரத்தில் கட்டப்பட்டிருந்ததாலும், கோவில் சிதிலமடைந்ததாலும் இக்கோவிலை இடித்து விட்டு அருகாமையில் புறம்போக்கு நிலத்தில் புதிதாக மாரியம்மன் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் மிகுந்த சிரமங்களுக்கிடையே நீண்ட வருடங்களாக உருவாக்கப்பட்டது இக்கோவில். ஆனால் கோவில் கட்டப்பட்டு சுமார் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதுவரை சுற்றுச்சுவர் இக்கோவிலுக்கு இல்லை. கோவிலின் சிற்பங்கள், சிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மாரியம்மன் கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.