குதிரைகளால் விபத்து

Update: 2023-01-08 09:36 GMT

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள சாலைகளில் குதிரைகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் குதிரைகள் மீது வாகனங்கள் மோதி விபத்துகளும் நிகழ்கிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து செல்லும் நிலை உள்ளது. எனவே சாலைகளில் குதிரைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்