சேதமடைந்த படித்துறை

Update: 2023-01-08 07:49 GMT

புதுக்கடையில் இருந்து ஐரேணிபுரம் செல்லும் சாலையில் அட்டகுளம் என்னும் ஊரில் குளம் ஒன்று உள்ளது.இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது குளம் பாசி படர்ந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் மாசடைந்து அப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், படித்துறையும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, குளத்தை படர்ந்துள்ள பாசிகளை அகற்றி படித்துறையை சிரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரதீஷ், அட்டகுளம்.

மேலும் செய்திகள்