பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் நிலையம் உள்ளது. இதேபோல பெரம்பலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் நிலையம் அமைக்க வேண்டும். இதனால் தபால் அலுவலக தெரு கடைவீதி பள்ளிவாசல் தெரு, என்.எஸ்.பி. சாலை மார்க்கெட் தெரு போன்ற பகுதிகளுக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கும், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், கிருஷ்ணாபுரம், அரும்பாவூர், வெண்பாவூர், பூலாம்பாடி, நெற்குணம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி வீரகனூர், சேலம், துறையூர் போன்ற வெளியூர் செல்லும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.