விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தென்காசி சாலை, மதுரை சாலை, முடங்கியாறு சாலை, ரெயில்வே பீடர் சாலை, டி.பி. மில்ஸ் சாலை, சத்திரப்பட்டி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.