விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களின் விவசாய நிலத்திற்குள் காட்டுப்பன்றிகள், யானை போன்ற விலங்குகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.