ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2023-01-01 07:34 GMT

கோவை மாநகராட்சி 19-வது வார்டு கணபதி தென்வடல் சாலையில் விநாயகர் கோவில் அருகில் தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே பழுதான தெருவிளக்குகளை சரி செய்து, அந்த பகுதி மீண்டும் வெளிச்சம் பெற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்