நாய்கள் தொல்லை

Update: 2022-07-18 16:34 GMT

தஞ்சை சீனிவாசபுரம் பகுதியில் உள்ள சாலையில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள ஆடுகள், கோழிகளை வேட்டையாடி செல்கின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள், பெண்களை விரட்டி செல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தி செல்வதால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி சீனிவாசபுரம் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்