சுகாதார சீர்கேடு

Update: 2022-12-25 09:11 GMT

கோவை ஒண்டிபுதூரில் இருந்து இருகூர் செல்லும் வழியில் மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பொது கழிப்பிடம் ஒன்று உள்ளது. இந்த கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இதனால் அங்கு பழைய துணிகள், குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே பொது கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்