தெருநாய்கள் தொல்லை

Update: 2022-12-25 09:09 GMT

கோவை பெரியநாயக்கன்பாளையம் முதலாவது தெருவில் தெருநாய்கள் தொல்ைல அதிகளவில் உள்ளது. அவை சாலைகளில் நடந்து செல்பவர்களையும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துகின்றன. மேலும் கடிக்க முயல்வதால், அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் சாலைகளில் செல்லவே பொதுமக்கள் அச்சம் அடையும் நிலை காணப்படுகிறது. எனவே அந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்