விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துகிறது. மேலும் சாலையில் செல்லும் வாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகிறது. எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.