வாகன ஓட்டிகள் அவதி (மதுரை)

Update: 2022-12-14 13:13 GMT

மதுரை கூடல்நகர் ரெயில்வே மேம்பாலத்திலிருந்து ஆனையூர் செல்லும் பிரதான சாலையில் குடிநீர் குழாய்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாததால் சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்