போலீசார் ரோந்து செல்ல கோரிக்கை

Update: 2022-12-07 16:52 GMT
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், நத்தம் கிராமத்தில் இருந்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்சில் செல்லும் மாணவர்கள் பலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி வருகின்றனர். இதனால் தினமும் மாணவர்கள், பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இதனால் சரியாக நேரத்திற்கு குறிப்பிட்ட இடத்திற்கு பயணிகள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் பஸ் வரும் நேரங்களில் அந்த பகுதியில் ரோந்து வந்து பஸ் படிக்கட்டுகளில் தொங்கி வருவர்களை எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்