சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள்

Update: 2022-12-07 16:02 GMT
கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. சிட்டப்ப கவுடர் தெரு, நடுத்தெரு, காந்திகிராமம், அண்ணாநகர், சுக்காங்கல்பட்டி கிழக்கு, காய்கறி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. இரவு நேரங்களில் வெளியூர்களுக்கு சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு வரும்போது மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும் நாய்கள் விரட்டி வந்து பொதுமக்களை கடித்து விடுகின்றன. தற்போது கூடலூர் நகரப் பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தினமும் பொதுமக்கள் தெருநாய்களின் தொல்லையில் சிக்கி வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்