குழந்தைகளை கடிக்கும் தெருநாய்கள்

Update: 2022-12-07 13:46 GMT
பெரம்பலூர் மூன்று மற்றும் நான்காவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகள், பாரதிதாசன் நகர் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் சிறுவர், சிறுமிகளை கடித்து வருவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துகின்றன. இதனால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்